என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    WPL ஆர்.சி.பி.க்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்
    X

    WPL ஆர்.சி.பி.க்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்

    • நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
    • ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை அமெலியா கெர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜி. கமாலினி 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.

    சஜீவன் சஜனா 25 பந்தில் 45 ரன்கள் அடித்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. பேட்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×